×

பொள்ளாச்சி பாலியல் கொடுமை விவகாரம் முன்ஜாமீன் கோரி நக்கீரன் கோபால் ஐகோர்ட்டில் மனு

சென்னை: பொள்ளாச்சி பாலியல் கொடுமை விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி நக்கீரன் கோபால் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல்  செய்துள்ளார்.  பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை மிரட்டி கூட்டு பாலியல் தொந்தரவு செய்ததோடு, அதை வைத்து மிரட்டி பணம் பறித்த கும்பல் தொடர்பான விவகாரம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபால் எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் பொதுவெளியில், அவரது  பத்திரிகை மற்றும் இணையதளம் மூலமாக அவதூறான கருத்துக்களை பரப்பி வருவதாக புகார்  கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, மார்ச் 15ம் தேதி ஆஜராகுமாறு மத்திய குற்றப்பிரிவு போலீசார் நக்கீரன் கோபாலுக்கு சம்மன் அனுப்பினர். அந்த விசாரணைக்கு நக்கீரன் கோபால் ஆஜராகவில்லை. இதையடுத்து,  தன்னை போலீசார் கைது செய்ய நேரிடும். எனவே, இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக்கோரி நக்கீரன் கோபால் உயர் நீதிமன்றத்தில்  மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முன்னிலையில் விரைவில்  விசாரணைக்கு வர உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pollachi Sexual Harassment ,Najeevan Goki , Pollachi ,Sexual Harassment, Nakheeran, Gopal, High Court
× RELATED பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கு...